• No products in the basket.

மரபுத் தமிழ் | Samacheer Questions with Answer

பயிலுக

படத்திற்குப் பொருத்தமான திணையை எழுதுக.

விடை: உயர்திணை     அஃறிணை        உயர்திணை

சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. கோழி (கூவும்/கொக்கரிக்கும்) 2. பால் (குடி/பருகு)
  2. சோறு (தின்/உண்) 4. பூ (கொய்/பறி) 5. ஆ (நிரை/மந்தை)

விடை: 1. கொக்கரிக்கும்           2. பருகு                3. உண்                 4. கொய்              5. நிரை

மரபுப் பிழையை நீக்கி எழுதுக.

சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது. பூவைப் பறித்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் கொய்து கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலைக் குடித்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.

விடை: சேவல் கூவும் சத்தம் கேட்டுக்கயல் கண்விழித்தாள். பூக்கொய்ய நேரமாகிவிட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது. பூவைக் கொய்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் பறித்துக்கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலைப் பருகிவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.

பின்வரும் மரபுத்தொடர்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

  1. வாழையடி வாழையாக 2. முதலைக்கண்ணீர் 3. எடுப்பார் கைப்பிள்ளை

விடை : 1. முகலாய மன்னர்கள் வாழையடி வாழையாக இந்தியாவை ஆட்சி செய்தனர்.

  1. காவலரிடம் மாட்டிக்கொண்ட திருடன் தான் திருடவில்லை என்று முதலைக் கண்ணீர் வடித்தான்.
  2. ரகு சுயமாக யோசிக்காமல் எடுப்பார் கைப்பிள்ளை போலச் செயல்படுகிறான்.

சொற்றொடர்களை அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.

1) மறுநாள் வீட்டுக்கு வருவதாக முரளி கூறினார். (நேர்க்கூற்றாக மாற்றுக)

2) “தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அறிஞர் அண்ணாவைப் புகழ்கிறோம்” என்று ஆசிரியர் கூறினார். (அயற்கூற்றாக மாற்றுக)

3) மார்னிங் நாஷ்டாவுக்கு இரண்டு தோசைகள் ஹோட்டலில் சாப்பிட்டான். (பிறமொழிச் சொற்களைத் தமிழாக்குக)

4) அலறும் மயிலும் கூவும் ஆந்தையும் அகவும் சேவலும் போன்ற இயற்கையின் அழகான ஒலிகளை நாம் நேசிக்கவேண்டும். (ஒலிமரபுப் பிழைகளைத் திருத்துக)

5) கோழிக்குட்டிகளைப் பிடிக்கப் பூனைக்குஞ்சுகள் ஓடின. (பெயர்மரபுப் பிழைகளைத் திருத்துக)

விடை :  1. “நான் நாளை வீட்டுக்கு வருவேன்” என்று முரளி கூறினார்.

  1. தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அண்ணா புகழப்படுவதாக ஆசிரியர் கூறினார்.
  2. காலை சிற்றுண்டிக்கு இரண்டு தோசைகளை உணவு விடுதியில் (உணவகத்தில்) உண்டான் (சாப்பிட்டான்).
  3. அகவும் மயிலும், அலறும் ஆந்தையும், கூவும் சேவலும், போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும்.
  4. கோழிக்குஞ்சுகளைப் பிடிக்க பூனைக்குட்டிகள் ஓடின.

தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

  1. வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன.
  2. முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான்.
  3. கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை அமைத்தார்.
  4. வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குட்டியும் யானைக்குட்டியும் கண்டேன்.
  5. ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் பொந்துகள் அமைத்திருந்தன.
  6. பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.

விடை :  1. வாழைத்தோப்பில் குயில்கள் கூவிக்கொண்டும் காகங்கள் கரைந்து கொண்டும் இருந்தன.

  1. முருகன் சோறு உண்டு பால் பருகினான்.
  2. கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை வேய்ந்தான்.
  3. வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குருளையும், யானைக் குட்டியும் கண்டேன்.
  4. ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் வளைகள் அமைத்திருந்தன.
  5. பனை ஓலையால் கூரை வேய்ந்திருந்தனர்.
 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.